வெள்ளிச்சந்தை அருகே மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

குளச்சல், அக்.17: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஜார்ஜியார் தெருவை சேர்ந்தவர் சூசைமார்க் (62). மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் சூசைமார்க் அவதிப்பட்டு வந்து உள்ளார். இதனால் விரக்தி அடைந்தவர் சம்பவத்தன்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சூசைமார்க் வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சூசைமார்க் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சூசை மார்க்கின் மனைவி வசந்தி அளித்த புகாரின் பேரில், வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமையபுரம் ஊராட்சியில் குவாரி உரிமத்தை ரத்து செய்யுங்கள்

டூவீலர் திருட்டு

16 வயதிற்குட்பட்ட தேசிய அளவிலான ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 4 மாநில வீரர்கள் பங்கேற்பு