வெள்ளக்கோவில் நகராட்சியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணி 12 டன் குப்பைகள் அகற்றம்

 

வெள்ளக்கோவில், பிப்.2:வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடைகளில், வீட்டுகுப்பைகள், வியாபாரக் கடைகளின் குப்பைகள், அழுகிய பழங்கள்,பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள், பாட்டில்கள், அழுகிய துணிகள், பழைய துணிகள் போன்ற பலதை சாக்கடையில் கொட்டியதால் சாக்கடை அடைக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சமீபத்தில் பெய்த மழையால் மழை நீர் சாக்கடையில் செல்லாமல் ரோட்டில் ஓடியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் கனியரசி, கமிஷ்னர் வெங்கடேஸ்வரன் உத்திரவின் பேரில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடைபட்ட சாக்கடையை சுத்தம் செய்து வருகின்றனர். இதில் தேசிய நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய பஸ்நிலையம் முதல் புது பஸ்நிலையம் செல்லும் பகுதியில் சாக்கடையை சுத்தம் மேற்கொண்டதில், பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகள் மண் என 12 டன் அளவில் அகற்றப்பட்டது. சாக்கடையை மூடி கடை வைத்திருப்பவர்கள் மீதும் குப்பைகளை கெட்டுபவர்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி