Saturday, September 28, 2024
Home » வெள்ளகோவில் அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது

வெள்ளகோவில் அருகே விவசாயி வீட்டில் நகை திருடியவர் கைது

by Ranjith

 

வெள்ளகோவில், ஜூன் 8: வெள்ளகோவில் டி.ஆர்.நகரை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (58). இவர் கடந்த மாதம் 19ம் தேதி கணபதிபாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் பணி செய்து கொண்டு அங்கேயே தங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மறுநாள் டி.ஆர்.நகர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, வீடு முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 4 பவுன் நகை, 500 கிராம் எடையுள்ள 2 வெள்ளி விளக்குகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தில் கொள்ளையர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. அதன் அடிப்படையில் நேற்று போலீசார் வெள்ளகோவில் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியில் சென்ற ஈரோடு குமலான்குட்டை குமரன்நகரை சேர்ந்த தமிழரசு (24) என்பரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.5 பவுன் நகையை மீட்டு காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi