புதுடெல்லி: உலக தீவிரவாத அமைப்புகள் அச்சுறுத்தல், வெளிநாட்டு தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்துள்ள சூழலில், இதனை எதிர் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பாதுகாப்பு அமைப்புகளான, ஒன்றிய நுண்ணறிவு பிரிவு, மத்திய ஆயுதப்படை போலீஸ், பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு, வருவாய் மற்றும் நிதி உளவுப்பிரிவு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் டிஜிபி.க்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:` தீவிரவாத அச்சுறுத்தல், வெளிநாட்டு தீவிரவாதிகள் நடமாட்டம், போதை பொருள் கடத்தல், தீவிரவாதத்துக்கு நிதியுதவி ஆகிய பிரச்சனைகள் குறித்து பாதுகாப்பு, உளவுப்பிரிவு உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்தார்….