வெற்றி..சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் 105 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு..!!

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 105 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். janjgir -champa மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் ராகுல் ஷாகு தவறி விழுந்தான். 60 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. 105 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் ராகுல் ஷாகு பத்திரமாக மீட்கப்பட்டான். ராகுல் ஷாகு நல்ல நிலையில் இருப்பதாகவும், ஐ.சி.யூ.வில் சிறப்பு மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!

அடித்து பெய்யும் மழை! மிதக்கும் மும்பை

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!