Thursday, June 27, 2024
Home » வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல்: போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

வெப்பத்தை சமாளிக்க ஓ.ஆர்.எஸ்.கரைசல்: போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் வேண்டுகோள்

by Neethimaan

பெரம்பலூர்,மே8: பெரம்பலூர் மாவட்ட அளவில் வெப்பத்தை சமாளிக்க 20 இடங்களில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொது மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட அளவி லான காலநிலை மாற்றக் குழுக் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலை மையில் நேற்று (7ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததா வது : காலை நிலை மாற் றத்தின் காரணமாக தற் போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாரத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பயணத்தின் போது போதிய அளவி லான குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.ஓ.ஆர்.எஸ். கரைசல், எலு மிச்சை சாறு, இளநீர் ஆகி வற்றைக் குடிக்கலாம். வெயில் நேரத்தில் அதிகம் வெளியில் செல்லாமல் முடிந்தவரை வீட்டில் இருக்க வேண்டும். குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண் டாம். நிறுத்தப்பட்ட கார்களில்குழந்தைகளை விட்டுச் செல்ல வேண்டாம். மெல் லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.நமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை பாது காக்க வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். நாம் அடுத்த தலைமுறை யினருக்கு இதுபோன்ற நன்மைகளை செய்யுங்கள். இதுகுறித்து பொதுமக்களி டத்தில் போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண் டும். பெரம்பலூர் மாவட்டத் தில் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறையினர் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் 20 இடங்க ளில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், முத்துநகர், சாமியப்பா நகர் ஆகிய இடங்களிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம், சிறு வாச்சூர் பேருந்து நிறுத்தம், ஆலம்பாடி, எளம்பலூர் ஆகிய இடங்களிலும், வேப் பந்தட்டை ஒன்றியத்தில் வேப்பந்தட்டை, அரும்பா வூர், பூலாம்பாடி, வி.களத் தூர் பேருந்து நிறுத்தங்கள், ஆலத்தூர் ஒன்றியத்தில் டி.களத்தூர்,செட்டிகுளம் பேருந்து நிறுத்தம், கொளக் காநத்தம், மேலமாத்தூர் ஆகிய இடங்களிலும், வேப் பூர் ஒன்றியத்தில் குன்னம், வேப்பூர்,லெப்பைகுடிகாடு, அகரம்சீகூர் பேருந்து நிறுத்தங்கள் என மொத் தம் 20 இடங்களில் பொது மக்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய் ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித் தார்.

முன்னதாக மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்காக அமைக் கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர், அனைவருக்கும் ஓர்.ஆர்.எஸ் கரைசலின் முக்கியத்துவத்தை எடுத் துக்கூறி வழங்கிட அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை மற்றும் அனைத்து வட்டாட் சியர்கள், பேரூராட்சிசெயல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

fourteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi