வெப்படை வழியாக மீண்டும் பஸ்களை இயக்க நடவடிக்கை

நாமக்கல், மே 16: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சங்ககிரியில் இருந்து ஈரோடுக்கு வெப்படை வழியாக 6 பேருந்துகள் இயக்கப்பட்டன. பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த பிறகு 6 பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால், பள்ளி- கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சன்னியாசிபட்டி, எலந்தக்குட்டை, வெடியரசம்பாளையம், மோடமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, சங்ககிரி பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்