வெகுவாக குறைந்தது வைரஸ் பாதிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 4,184 பேருக்கு கொரோனா; 104 பேர் உயிரிழப்பு: 6,554 பேர் டிஸ்சார்ஜ்.!

டெல்லி: இந்தியாவில் தொடர்ச்சியாக 32வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 4,575 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,184 ஆக குறைந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரத்து 67 ஆக உயர்ந்தது. தொடர்ச்சியாக 31வது  நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 488 ஆக குறைந்தது. நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 6 ஆயிரத்து 554 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.  நாட்டில் மொத்தம் இதுவரை 1,79,53,95,649 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில்  18 லட்சத்து 23 ஆயிரத்து 329 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது….

Related posts

எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நேபாளத்தில் கடும் வெள்ளம்: இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!