வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி துவக்கம்

சேத்தியாத்தோப்பு:  கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் இப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. ஏரியின் பராமரிப்பு காரணங்களுக்காக கடந்த ஐந்தரை மாதங்களுக்கு முன் நீர்வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கீழணை மூலம் வடவாறு வழியாக ஏரிக்கு 1150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், வீராணம் ஏரிக்கு அந்த தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 41.05 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த ஐந்தரை மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 10 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு