வீரவநல்லூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

வீரவநல்லூர், செப். 14: வீரவநல்லூர் அருகே வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தளவாய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர் கலந்துகொண்டு 61 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வெள்ளங்குளி ஊராட்சி தலைவர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரகாஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி சூரியா, முதுகலை ஆசிரியர்கள் மகேஷ், டெய்சி ஜாய்ஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் எறும்பு பவுடர் தின்று கைதி தற்கொலை முயற்சி

திருவேற்காடு சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

திருத்தணி அருகே மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் கசிவு: டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம்