வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள் ஈரோட்டில் மீட்பு

 

திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சாமளாபுரம் பகுதி அரசு பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் மற்றும் சோமனூர் பகுதி அரசு பள்ளியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் என 4 பேர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.  மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் தெரிவித்த சில நேரத்திலேயே மாணவிகள் ஈரோட்டில் மீட்கப்பட்டு இருப்பதாக ஈரோடு மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மகளிர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் தங்களை தொடர்ந்து படிக்க வற்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மங்கலம் போலீசார் மற்றும் பெற்றோர் மாணவிகளை மீட்டு வர ஈரோடு சென்றனர்.

 

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்