வீட்டை காலிசெய்யக்கோரி தகராறு இளம்பெண்ணுக்கு சரமாரி வெட்டு: மாமனார், நாத்தனார் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே குடும்ப தகராறில் வீட்டைக் காலிசெய்ய கோரி ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை கத்தியால் வெட்டிய மாமனார், நாத்தனார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், சண்முகபுரம் பாரதிதாசன் நகர், முதல் தெரு சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (41). ரியல்எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி டெய்சி (36). தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில், தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக டெய்சி, கணவர் முரளி கிருஷ்ணனை விட்டுப்பிரிந்து, அதே காம்பவுண்டில் அவர்களது மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாமனார் ஜெகநாதன் (71), நாத்தனார் மலர்விழி (26) ஆகியோர் டெய்சி வசிக்கும் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் வீட்டை காலிசெய்ய கூறி அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் டெய்சியை அவதூறாக பேசியும் உள்ளனர். இதோடு மட்டுமல்லாமல், ஜெகநாதன் மறைத்துவைத்திருந்த கத்தி எடுத்து டெய்சியின் வலது கண் புருவத்தின்மேல், இடதுகை மணிக்கட்டிலும் வெட்டி உள்ளார். இதில், படுகாயமடைந்த டெய்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் டெய்சியை வெட்டிய மாமனார் ஜெகநாதன், உடந்தையாக இருந்த நாத்தனார் மலர்விழி ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்….

Related posts

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி