வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை கொள்ளை

தூத்துக்குடி,ஜூலை 27: தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போ லீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் முகம்மது ஹாரூன். இவரது மனைவி நிஷா (63). இவர் கடந்த 20ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து கடந்த 24ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்கச்செயின் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நிஷா தென்பாகம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி