வீட்டை உடைத்து பணம் கொள்ளை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் சரவணன்(45). ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி கோமளா வீட்டை பூட்டி கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு  திறந்து கிடந்தது.அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், ₹10,000 ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் பொன்னேரி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது….

Related posts

காதலிக்க வற்புறுத்தி 2 பேர் டார்ச்சர் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் மீட்டு வந்த பெற்றோர் வெட்டிக்கொலை

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு