கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(85). இவரது மனைவி மல்லிகா(65). இருவரும் நேற்று மதியம் வீட்டின் முன் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டில் இருந்து சத்தம் கேட்டதால் துரைசாமி வீட்டினுள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பார்த்தபோது பீரோவில் இருந்த 8 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். …