வீட்டில் ரூ.1.85 லட்சம் நகை திருட்டு

திருப்பரங்குன்றம், செப். 17: மதுரை அருகே வீட்டின் கதவுகளை உடைத்து ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து லட்சுமி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு படிப்பினை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்மபிரியா வழக்கம்ேபால் பல்கலைக்கழகம் சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த வீட்டின் கதவுகளை உடைத்து நகைகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி