வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது 30 பெட்டிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூலை 4: கிருஷ்ணகிரி டவுன் எஸ்ஐ செல்வராஜ் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அடுத்த பாணக்கார தெருவில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரகமத்துல்லா என்பவரது வீட்டில், போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில், அவரின் வீட்டில் பட்டாசு பாக்ஸ்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த ₹10,800 மதிப்பிலான 30பட்டாசு பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரகமத்துல்லாவுக்கு உதவியாக இருந்த இக்பான் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் பட்டாசு பாக்ஸ்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள ரகமத்துல்லாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை