வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராணி (32), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவர், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். கணவரின் நண்பரான சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையை சேர்ந்த கண்ணன் (37) அடிக்கடி இவர்களின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த 13ம் தேதி இரவு  ராணியின் கணவர் வெளியே சென்று இருந்தார். இதை தெரிந்து கொண்ட கண்ணன், நண்பனை பார்க்க வருவது போல் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவர் வெளியில் சென்றுள்ளதாக ராணி தெரிவித்துள்ளார். ஆனாலும்,  அங்கிருந்து செல்லாத கண்ணன், ‘‘குடிக்க தண்ணீர் வேண்டும்,’’ என ராணியிடம் கேட்டுள்ளார். வழக்கமாக வீட்டுக்கு வரும் கணவரின் நண்பர் தானே என்று நினைத்த ராணி, அவரை வீட்டிற்குள் அழைத்து உட்கார வைத்துவிட்டு, தண்ணீர் கொண்டு வர சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் வேறு யாரும் இல்லாததை  பார்த்த கண்ணன், ராணியை பின்தொடர்ந்து சென்று, அவர் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென கட்டியணைத்து முத்தம் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி உதவி  கேட்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ராணி வீட்டிற்கு ஓடிவந்தனர். இதை கவனித்த கண்ணன் சிக்கினால் உதைத்து விடுவார்கள் என்று அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து ராணி  சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கண்ணனை செய்தனர்….

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது