Sunday, June 30, 2024
Home » வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை 5 வாலிபர்கள் சிறையிலடைப்பு

by kannappan

சென்னை: வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை, கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சிறுமியின் தாய் வேறொருவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால், சிறுமி தனது 15 வயது அண்ணனுடன் தனியாக வசித்து வருகிறார். மெக்கானிக் கடையில் சிறுமியின் அண்ணன் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்கையை படிக்க வைத்து வருகிறார்.கடந்த ஜனவரி 17ம் தேதி சிறுமி அண்ணனின் நண்பர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அண்ணனின் நண்பர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில், தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து, ‘உனது நண்பன்  எந்த ஊரில் உள்ளான்,’ என கேட்டு சிறுமியின் அண்ணனை தாக்கியுள்ளனர். மேலும், சிறுமியையும், அவரது அண்ணனையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால், பயந்து போன சிறுமியின் அண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி திருத்தணியில் உள்ள  பெரியப்பா வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அதன் பிறகு, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8ம் தேதி நள்ளிரவு அந்த வாலிபர்கள் 5 பேர், நள்ளிரவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், சிறுமிக்கு செங்குன்றம் பாலகணேசன் நகரை சேர்ந்த லட்சுமணன் (23), அப்துல் (25), பம்மதுகுளம் கே.கே.நகரை சேர்ந்த பாபு (27), நாரவாரிகுப்பம், மாணிக்கம் தெருவை சேர்ந்த அக்பர் (22), வியாசர்பாடி, ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த கவுதம் (21) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

three + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi