வீட்டில் கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(61). ஓய்வுபெற்ற மின் ஊழியர். இவர் நேற்று சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள், பூஜை அறையில் இருந்த அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த திருட்டு குறித்து நாராயணன் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது