பெரியகுளம், அக். 11: வீட்டிற்கு தீ வைத்த வழக்கில் ஜாமீனில் சென்றவர் தலைமறைவானதால் பிடிவாரண்ட் உத்தரவை தொடர்ந்து நேற்று பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேவதானப்பட்டி அருகே உள்ள டி.காமக்காபட்டியை சேர்ந்தவர் ரவி (53). இவருக்கும், கெங்குவார்பட்டி கம்பெனி தெருவை சேர்ந்த சுரேந்தர் மனைவி தனலட்சுமிக்கும் (35) முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், 2016ல் தனலட்சுமியின் குடிசை வீட்டுக்கு ரவி தீ வைத்தார்.
தேவதானப்பட்டி போலீசார் ரவியை கைது செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன் ஜாமீனில் சென்ற ரவி தலைமறைவானார். ரவியை பிடிக்க சார்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ரவி பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி மாரியப்பன் அக்.17ல் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மதுரை சிறைக்கு ரவியை ேபாலீசார் கொண்டு சென்றனர்.