வீட்டிற்குள் புகுந்த பாம்பு

திருவாடானை,செப்.13: செங்கமடை பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் காட்டில் விட்டனர். திருவாடானை அருகே செங்கமடை பகுதியில் ஆனிமுத்து வீட்டில் பாம்பு இருப்பதாக திருவாடானை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) பழனிச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்