வீட்டின் கதவை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

 

கம்பம், மே. 8: கம்பம் முகைதீன் ஆண்டவர் புரம் தெருவைச் சேர்ந்தவர் பாரிஷா பேகம் (54). இவர் கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் கேரளா மாநிலம் குமுளிக்கு சென்றுவிட்டு இரவு கம்பத்தில் உள்ள தனது மகன் வீட்டில் தங்கியுள்ளார்.பின்னர் 5ம் தேதி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பாரிஷா பேகம் புகாரில், கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு