வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர் அருணாச்சலம் நகர் 2வது தெருவில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன் (42). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி ஜெயக்குமாரி (36). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களது மகன் தமிழரசு (16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்1 படிக்கிறார்.இந்நிலையில்,  நேற்றுமுன்தினம் காலை ராதாகிருஷ்ணன் தனது மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர்,  மாலை தமிழரசு பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து, அவர் கொடுத்த தகவல்படி தந்தை ராதாகிருஷ்ணன் உடனடியாக வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு,  அதில் வைத்திருந்த 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து, தகவல் அறிந்த,  திருநின்றவூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு,  வந்து விசாரணை நடத்தினர். பின்னர்  போலீசார் பீரோ, கதவுகளில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்….

Related posts

கத்தியை காட்டி டிரைவரை மிரட்டி லாரியில் வைத்திருந்த ரூ.42 லட்சம் கொள்ளை: ஆயுதங்களுடன் காரில் வந்து கும்பல் துணிகரம்

வக்கீல் மண்டையை உடைத்த அதிமுக ஊராட்சி தலைவர் கைது

நள்ளிரவில் வீடு புகுந்து தந்தையை கொன்று மகளை கடத்திய வாலிபர்: சில்மிஷ தகராறில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்