Friday, July 5, 2024
Home » வீடு புகுந்து தகராறு செய்த மாஜி கள்ளக்காதலனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

வீடு புகுந்து தகராறு செய்த மாஜி கள்ளக்காதலனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

by kannappan

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பெரிய மஞ்சவாடியை சேர்ந்த ஜெயராமன் மனைவி அனிதா(36). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளத்தொடர்பாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில், இருவரையும் அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர். இதையடுத்து அனிதா கள்ளத்தொடர்பை கைவிட்டார். அதே சமயம் அஜீத்குமாரும் ஓசூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2008 நவம்பர் 10ம்தேதி தீபாவளி பண்டிகைக்காக அஜீத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதாவிடம், மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அஜீத்குமார் முயற்சித்துள்ளார். அதற்கு அனிதா மறுத்து விட்டார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அனிதா, வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை கொண்டு அஜீத்குமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஜீத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து, அனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அஜீத்குமாரை கொலை செய்த அனிதாவுக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பு கூறினார். …

You may also like

Leave a Comment

3 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi