Tuesday, September 17, 2024
Home » வீடு கட்டுவதற்கு வாங்கிய பணத்தை தராத தகராறு பிளேடால் கழுத்தறுத்து பாட்டி படுகொலை: கொருக்குப்பேட்டையில் பேரன் கைது

வீடு கட்டுவதற்கு வாங்கிய பணத்தை தராத தகராறு பிளேடால் கழுத்தறுத்து பாட்டி படுகொலை: கொருக்குப்பேட்டையில் பேரன் கைது

by kannappan

தண்டையார்பேட்டை: வீடு கட்டுவதற்கு வாங்கிய பணத்தை தராத தகராறில் பிளேடால் கழுத்தறுத்து பாட்டியை படுகொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (70). வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகள் அமுதா, செங்குன்றம் அடுத்த காந்திநகர் நேரு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் (28). இந்நிலையில் நேற்று இரவு விசாலாட்சி வீட்டில், வீடு கட்டுவதற்கு பணம் கொடுத்தது தொடர்பாக விசாலாட்சிக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சசிகுமார், பாட்டியிடம் வாக்குவாதம்  செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சசிகுமார், வீட்டில் இருந்த  சுத்தியலை எடுத்து வந்து, விசாலாட்சியின் தலையில் ஓங்கிஅடித்துள்ளார். பின்னர், பிளேடால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பினார்.  படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாலாட்சியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து  விசாரித்தபோது, விசாலாட்சி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு தனது மகள் அமுதா செங்குன்றத்தில் வீடு கட்டுவதற்கு  4 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதில் பாதி பணத்தை திருப்பி விசாலாட்சியிடம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இததொடர்பாக தாய், மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.  வழக்கம்போல் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார், சுத்தியலால் அடித்தும், பிளேடால் கழுத்தை அறுத்தும் பாட்டி விசாலாட்சியை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. வீடு கட்டுவதற்காக வாங்கிய பணத்தை தராத தகராறில் கழுத்தறுத்து பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

11 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi