வீடுகளின் முன் நிறுத்திய 3 கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் போலீஸ் விசாரணை

தர்மபுரி, ஜூலை 4: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மேல்வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் வினோத்குமார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம், பார்த்த போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதே பகுதியில் வசித்து வரும் வினோத்குமாரின் உறவினரான வெங்கடேஷ் என்பவரது கார் கண்ணாடியையும், பரத் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரின் கண்ணாடியையும் மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இதுபற்றி வினோத்குமார் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மர்ம நபர்கள் எதற்காக கார் கண்ணாடிகளை உடைத்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை