வீடியோ கால் மூலம் நூதன மோசடி பெண்ணின் ஆபாச செய்கையை பார்த்து எம்எல்ஏ அலறல்: மும்பை போலீசார் வழக்குப்பதிவு

மும்பை: வீடியோ கால் மூலம் எம்எல்ஏவை அழைத்த பெண் ஒருவர், ஆபாச செய்கையை செய்து காட்டியதால் அலறிய சிவசேனா எம்எல்ஏ அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பிரகாஷ் சுர்வே என்பவர் தாஹிசர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த மாதம் எனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து வீடியோ கால் வந்தது. அந்த செல்போன் அழைப்பை ஏற்றப் போது எதிர்முனையில் பேசி பெண் ஒருவர், ஆபாசமான செய்கைகள் செய்து கொண்டே என்னிடம் பேசினார். உடனடியாக நான் அந்த செல்போன் வீடியோ கால் இணைப்பை துண்டித்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து மற்றொருவர் அழைத்தார். அவர், அந்த பெண்ணுடன் நான் இருப்பது போன்ற ஆபாச வீடியோவை மார்பிங் செய்து, என்னுடைய செல்ேபானுக்கு அனுப்பினார். பின்னர், 5,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் மார்பிங் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்குவதாக அச்சுறுத்தினார். எனவே, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து தஹிசர் போலீசார் ஐபிசியின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் தொடர்புடைய பெண் மற்றும் மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்….

Related posts

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

மேலும் ஒரு பாலம் இடிந்தது: தேஜஸ்வி குற்றச்சாட்டு

பெண் கண்டக்டர், பயணிகள் பிரசவம் பார்த்தனர்; அரசு பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்: தெலங்கானா சாலை போக்குவரத்து கழகம் அறிவிப்பு