விஷவாயு தாக்கியதில் இன்ஜினியர் பலி?

பூந்தமல்லி, ஆக.21: சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (30), தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பணிகளை முடித்து விட்டதாக மாலையில் தனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சிறிது நேரம் கழித்து அவருடன் பணிபுரியும் தமீன் என்பவர் வந்து பார்த்தபோது கழிவுநீர் தொட்டியில் தினேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி