விஷம் வைத்து 2 நாய் சாகடிப்பு?

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி செல்வம் தெருவை சேர்ந்தவர் அரசக்குமார் (43). இவருக்கும், உறவினரான ராஜசேகர் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு அரசக்குமார் சென்றார். அப்போது அங்கு அவர் வளர்த்து வரும் இரண்டு நாய்கள் இறந்துகிடந்தன. இதுபற்றி அவர் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் தனது நாய்களுக்கு விஷம் வைத்து சாகடித்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி