விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு

நத்தம், ஜூன் 20: நத்தம் அருகே செந்துறை நல்லபிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (39). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து இருந்த பாக்கியராஜ், கடந்த ஜூன் 14ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.

உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்