விஷம் குடித்து வியாபாரி சாவு

விழுப்புரம், நவ. 19: தொழில் நஷ்டத்தால் பொம்மை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு பகுதிைய சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(55). இவர் பொம்மைகள் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நேற்றுமுன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி பானுமதி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை