விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு, ஜூன் 23: நம்பியூர் அடுத்துள்ள வேமாண்டம்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (85). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் பழனியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து குடித்து விட்டார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு