விஷம் குடித்து முதியவர் சாவு

கடலூர், பிப். 25: கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் நாகலிங்கம்(75). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், முடக்கு வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்த அவர், சம்பவத்தன்று பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’