விஷம் குடித்து முதியவர் சாவு

 

புவனகிரி: பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(80). இவர் வயிற்று வலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் சரவணன் அளித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி