விஷம் குடித்து பெண் தற்கொலை

பேராவூரணி, ஆக. 3: பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 26ம் தேதி தம்பதியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது, திவ்யா விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தாய் சுமதி, பேராவூரணி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்