விஷம் குடித்து தொழிலாளி சாவு

திண்டுக்கல், ஜூன் 21: திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்தவர் மரியசூசை (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனாலும் நோய் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மரியசூசை கடந்த ஜூன் 12ம் தேதி திண்டுக்கல்- நத்தம் சாலை பதனிகடை பிரிவு அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரியசூசை நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்பிரமணி, சிறப்பு எஸ்ஐ கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு