தொண்டாமுத்தூர், ஜன.13: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் தொண்டாமுத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதியில் சுவாமி விவேகானந்தர் 162வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் டாக்டர் சிவக்குமார், விவேகானந்தர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விடுதி காப்பாளர் மகேஷ் குமார், சமூக ஆர்வலர் வருண், நிவேதா ஆகியோர் இனிப்பு வழங்கினர். விடுதி பணியாளர்கள் சுப்ரமணியன், தண்டபாணி, சுப்புலட்சுமி மற்றும் விடுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விவேகானந்தர் பிறந்தநாள் விழா
previous post