விவசாயி வீட்டில் கொள்ளை

பொன்னேரி: திருவேங்கடாபுரம் கிராமத்தில் பொன்னியம்மன் நகர் 4வது குறுக்கு தெருவில் வசிப்பவர் முரளி. விவசாயி. இவர், சென்னையில் உள்ள தமது மகனின் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டின் கதவு பூட்டாமல் வெளிப்புறமாக தாழிடப்பட்டிருப்பதாக அருகில் இருப்பவர்கள் முரளிக்கு தகவல் கொடுத்தனர். முரளி, அவசர அவசரமாக வந்து பார்த்தபோது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைந்திருந்த ₹20,000 கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவுசெய்து அப்பகுதி கணாணிப்பு கேமர உதவியுடன் கொள்ளையர்களை தேடுகின்றனர்….

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

குழந்தையுடன் மனைவி மாயம் மாமியார், மூதாட்டியை வெட்டி கொன்ற மருமகன்