விவசாயி கொலை

சென்னை: மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (67). விவசாயி. இவர், நேற்றுமுன்தினம்  தனது விவசாய நிலத்தில் இருந்து பறிக்கப்பட்ட சாமந்தி பூக்களை விற்பனைக்காக சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். பின்னர்,  பணி முடிந்த பிறகு தனது இருசக்கர வாகனத்தில் அன்று இரவு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது,  ராமாபுரம் சந்தை பகுதி அருகே, மர்ம நபர்கள் அவரை வழி மறித்து வெட்டி கொலை செய்துள்ளனர். தகவலறிந்த மேல்மருவத்தூர் போலீசார்  உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். …

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு