Saturday, September 21, 2024
Home » விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

விவசாயிகள் வலியுறுத்தல் தஞ்சாவூரில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

by Karthik Yash

தஞ்சாவூர், ஜூன் 6: தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார். தஞ்சாவூர் கோரிக்குளம் புதுத் தெருவை சேர்ந்தவர் காளயர். இவருடைய தாயார் சரஸ்வதி (60). இவர் நேற்றுமுன்தினம் வெற்றிலை வாங்க கடைக்கு செல்வதற்காக விளார் புறவழிச்சாலையில் உள்ள வெட்டிக்காடு பாலம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி மீது மோதியதில் தூக்கிவீசப் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காளயர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

ten + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi