விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பாடாலூர் அருகே பிலிமிசை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணியை பள்ளியின் தலைமையாசிரியர் அமிர்தம் தொடங்கி வைத்தார். பேரணியில் பள்ளியில் மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பள்ளியில் முடிவடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி