விருதுநகர், ஜூன் 17: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 23ம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 23ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுமூலம் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.