விவசாயிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்

 

காரைக்குடி, ஆக. 7: காரைக்குடி அருகே குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில். மாவட்ட வேளாண் வளர்ச்சி ெதாடர்பாக, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செயல்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகள் குறித்து விளக்கினார். இதையடுத்து ஓ.சிறுவயல் உமேஷ்கண்ணன், கருங்குளம் முருகேசன், இயற்கை விவசாயி ஆபிரகாம், சிங்கம்புணரி கார்த்திகேயன் தாஸ் உள்ளிட்ட விவசாய தொழில் சார்ந்த வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோர் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார். பின்னர் ஆடுவளர்ப்பு தொடர்பான கையேட்டை கலெக்டர் ஆஷாஅஜித் வெளியிட்டார்.

Related posts

ஓடும் பஸ்சில் மாணவன் மீது சரமாரி தாக்குதல் வீடியோ வைரலால் பரபரப்பு குடியாத்தம் அருகே

சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை காவலர்கள் டார்சர் நேரில் சந்தித்த மனைவி புகார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள

குழந்தை திருமணம் செய்து 4 சிறுமிகள் கர்ப்பம் 4 பேர் மீது போக்சோ வழக்கு காட்பாடி தாலுகாவில்