சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகை குறைவு. எனவே, தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கிற விவசாயப் பயிர் சேத இழப்பீட்டுக்கான தொகையை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும். …