சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துக்கு ரூ.5157 கோடி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ கால்வாய்கள் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. …