Thursday, September 19, 2024
Home » விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் புதுமடம் மக்கள் கோரிக்கை

விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் புதுமடம் மக்கள் கோரிக்கை

by Karthik Yash

மண்டபம்,செப்.13: புதுமடத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலை சீரமைக்க அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சப்புளி அருகே புதுமடத்தில் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடலில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால்,கூடைப்பந்து, கபடி உள்பட உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளை விளையாடி வந்தனர். இந்நிலையில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் திடலில் விளையாட்டுக்கேற்ப உயரமாக அமைக்கப்பட்ட கம்பி வலைகள் சேதமடைந்து உள்ளது. அதுபோல திடலில் மரம் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் இளைஞர்கள் விளையாடுவதற்கு செல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் சேதமடைந்த விளையாட்டு திடலை சீரமைத்து பயன்பாடுக்கு கொண்டு வரவும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

eight − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi