Thursday, July 4, 2024
Home » விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான மசோதா : நாடாளுமன்றத்தில் தாக்கல்!!!

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான மசோதா : நாடாளுமன்றத்தில் தாக்கல்!!!

by kannappan

டெல்லி: விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான தனிநபர் மசோதா ஒன்றை பாரதிய ஜனதா கட்சி எம்.பி. வருண் காந்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக ரத்து செய்திருக்கும் நிலையில் டெல்லி எல்லையில் ஒரு ஆண்டாக நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை  ஒன்றிய அரசு ஏற்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலம்,  பிலிபிட் தொகுதி பா.ஜ.க உறுப்பினர் வருண் காந்தி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான விவசாயிகளின் உரிமை மசோதா 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது. 22 வகையான விவசாய விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவில் 50% விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வருண் காந்தி அதில் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து சாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதோடு விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும்  வருண் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கென்று, பிரத்யேகமாக அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்படவேண்டும் என்று தனிநபர் மசோதாவில் வருண் காந்தி ஓன்றிய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். …

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi