விளைச்சல் பாதிப்பால் மிளகு விலை அதிகரிப்பு: கிலோ 600க்கு விற்பனை

சேலம்: தமிழகம், கேரளாவில் மிளகு விளைச்சல் பாதிப்பால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமல்லி, ஏலகிரி, ஊட்டி, கொடைக்கானல், கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலும், இதைவிர கேரளாவில் இடுக்கி, குமுளி உள்பட பல பகுதிகளில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிளகு சாகுபடி நடக்கும். கடந்தாண்டு பெய்த ெதாடர் மழையால் கேரளாவில் பல இடங்களில் மிளகு செடிகள் நீரில் மூழ்கியது. அதேபோல் தமிழகத்திலும் மிளகு செடிகள் அழிந்தன. இதன் காரணமாக கடந்தாண்டைவிட நடப்பாண்டு மிளகு விளைச்சல் 25 முதல் 30 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் மிளகின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் மளிகை வியாபாரிகள் கூறுகையில், நடப்பாண்டு மிளகு சாகுபடி செய்திருந்த இடங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து சரிந்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ மிளகு ₹350 முதல் ₹390 என விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ₹600 முதல் ₹650 என விற்பனை செய்யப்படுகிறது. மிளகு விளைச்சல் அதிகரிக்கும்போது விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!