பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த செட்டிவாரிப்பள்ளி பி.பி.புரம் கிராமத்தில் கிராம தேவதை ஏடு கங்கம்மா, ராமக்கம்மா திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கிராமம் மற்றும் ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இந்நிலையில், நேற்று காலை பெண்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்று அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை சுமங்கலி (குத்துவிளக்கு) பூஜையை கமலா காந்தி தொடங்கிவைத்தார். இதில் 504 பெண்கள் பக்னேற்று தீபம் ஏற்றிவைத்து சுமங்கலி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதனால் கிராமம் விழாக்கோலம் பூண்டு காண்டப்பட்டது….